| பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                மஞ்சள் இலைப்புள்ளி நோய்: மைக்கோஸ்போரெல்லா மியூசிகோலா  | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்:
                  
                    - ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் சிறு சிறு வெளிர் மஞ்சள் நிற அல்லது பச்சை நிற புள்ளிகள் தோன்றும். 
 
                    - இப்புள்ளிகள் பின்பு விரைந்து நீள் வடிவத்தில் பழுப்பு நிறப் பெரும் புள்ளிகளாக மாறுகின்றன. 
 
                    - பின்பு இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறமும் அதைச் சுற்றிலும் மஞ்சள் நிற குழிப்பகுதியும் தோன்றும். 
 
                    - இச் சிறு சிறு புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின் இவை காய்ந்து இலை முழுவதும் வாடிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி பெரிதும் தடைபடுகிறது. 
 
                    - நெருக்கமான நடவு, மண்ணில் அதிகக் களைகள் மற்றும் வடிகால் வசதியில்லாத மண் ஆகியவை இந்நோய்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தும். நோய்க்காரணிப் பூஞ்சாணம் இலையின் அடிப்பாகத்திலுள்ள நுண்ணிய துளைகளின் மூலம் பரவுகிறது. 
 
                    
                    | 
               
              
                
                  
                    |   | 
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    |   | 
                    வெளிர் மஞ்சள்  அல்லது பச்சை நிற புள்ளிகள் | 
                      | 
                    நீள் வடிவத்தில் பழுப்பு நிறப் பெரும் புள்ளிகள் | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  | 
               
              
             
              
                
                  கட்டுப்படுத்தும் முறை:                     
                    
                    
                      - நோய்த் தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்கவும். 
 
                      - இடைக்கன்றுகள், களைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்கவும். 
 
                      - நெருங்கிய இடைவெளி, குறைந்த நடவு முறையைத் தவிர்க்கவும். 
 
                      - சரியான வடிகால் வசதி அமைப்பதால் வயலில் நீர்தேங்காமல் தடுக்கலாம். 
 
                      
                      - கார்பென்டஸிம் 0.1% அல்லது புரப்பிகோனஸோல் 0.1% அல்லது மேன்கோஷெப் 0.25%  ஏதேனும் ஒரு மருந்துடன் ஒட்டுந் திரவமான டிப்பால் சேர்த்து 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதியில் கரும்புள்ளிகள் தெரிந்த நாளிலிருந்து 3 முறை தெளித்து வரவேண்டும். 
 
                     
                     | 
                  
                 
                
                        | 
           
       
  |